A7-A
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை
நான்கு சுவிசேஷப் புத்தகங்களிலிருந்து காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது
பின்வரும் அட்டவணைகளோடு வரைபடங்களும் இருக்கின்றன; இயேசு பயணம் செய்த இடங்களையும், பிரசங்கம் செய்த இடங்களையும் அவை காட்டுகின்றன. வரைபடங்களில் இருக்கும் அம்புக்குறிகள் திசையை மட்டும்தான் காட்டுகின்றன, அவர் போன வழிகளை அல்ல.
இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
கி.மு. 3 |
எருசலேம், ஆலயம் |
யோவான் ஸ்நானகருடைய பிறப்பைப் பற்றி காபிரியேல் தூதர் சகரியாவிடம் முன்னறிவிக்கிறார் |
||||
சுமார் கி.மு. 2 |
நாசரேத்; யூதேயா |
இயேசுவின் பிறப்பைப் பற்றி காபிரியேல் தூதர் மரியாளிடம் முன்னறிவிக்கிறார்; மரியாள் தன் சொந்தக்காரப் பெண்ணாகிய எலிசபெத்தைச் சந்திக்கிறாள் |
||||
கி.மு. 2 |
யூதேய மலைப்பிரதேசம் |
யோவான் ஸ்நானகர் பிறக்கிறார், அவருக்குப் பெயர் வைக்கப்படுகிறது; சகரியா தீர்க்கதரிசனம் சொல்கிறார்; யோவான் வனாந்தரத்தில் வாழ்வார் |
||||
கி.மு. 2, சுமார் அக். 1 |
பெத்லகேம் |
இயேசுவின் பிறப்பு; ‘அந்த வார்த்தை ஒரு மனிதரானார்’ |
||||
பெத்லகேம் பக்கத்தில்; பெத்லகேம் |
மேய்ப்பர்களுக்குத் தேவதூதர் நல்ல செய்தி சொல்கிறார்; தேவதூதர்கள் கடவுளைப் புகழ்கிறார்கள்; மேய்ப்பர்கள் போய் குழந்தையைப் பார்க்கிறார்கள் |
|||||
பெத்லகேம்; எருசலேம் |
இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது (8-ஆம் நாள்); பெற்றோர் அவரை ஆலயத்துக்குக் கொண்டுபோகிறார்கள் (40-ஆம் நாளுக்குப் பின்பு) |
|||||
கி.மு. 1 அல்லது கி.பி. 1 |
எருசலேம்; பெத்லகேம்; எகிப்து; நாசரேத் |
ஜோதிடர்கள் சந்திக்கிறார்கள்; குடும்பம் எகிப்துக்குத் தப்பியோடுகிறது; சிறு பையன்களை ஏரோது கொல்கிறான்; குடும்பம் எகிப்திலிருந்து திரும்பிவந்து நாசரேத்தில் குடியேறுகிறது |
||||
கி.பி. 12, பஸ்கா |
எருசலேம் |
12 வயது இயேசு ஆலயத்தில் போதகர்களிடம் கேள்வி கேட்கிறார் |
||||
நாசரேத் |
நாசரேத்துக்குத் திரும்பிப்போகிறார்; பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்; தச்சுத்தொழில் கற்றுக்கொள்கிறார்; மரியாளுக்கு இன்னும் நான்கு மகன்களும் சில மகள்களும் இருக்கிறார்கள் (மத் 13:55, 56; மாற் 6:3) |
|||||
29, வசந்த காலம் |
வனாந்தரம், யோர்தான் ஆறு |
யோவான் ஸ்நானகர் ஊழியத்தை ஆரம்பிக்கிறார் |