Skip to content

இயேசுவின் மரண நினைவுநாள்

சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2025

ஒவ்வொரு வருஷமும் யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்துவின் நினைவுநாளை அனுசரிக்கிறார்கள். ஏனென்றால், “என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 22:19.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நிகழ்ச்சி எவ்வளவு நேரம்?

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம்.

எங்கே நடக்கும்?

உங்கள் பகுதியில் எங்கே நடக்கிறது என்று யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

கலந்துகொள்ள ஏதாவது கட்டணம் கட்ட வேண்டுமா?

இல்லை.

நிகழ்ச்சியில் பணம் வசூலிக்கப்படுமா?

இல்லை.

ஒரு குறிப்பிட்ட விதமான உடையை அணிய வேண்டுமா?

அப்படி எதுவும் இல்லை. ஆனால், பைபிள் சொல்வது போல் யெகோவாவின் சாட்சிகள் அடக்கமாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் உடை உடுத்துகிறார்கள். (1 தீமோத்தேயு 2:9) நீங்கள் போடும் உடை, விலை உயர்ந்ததாகவோ ஆடம்பரமாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் பாடல் மற்றும் ஜெபம் இருக்கும். யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு ஊழியர் ஜெபம் செய்வார். பின்பு, பைபிள் அடிப்படையில் ஒரு பேச்சு கொடுக்கப்படும். இயேசுவின் மரணம் ஏன் ரொம்ப முக்கியம்... கடவுளும் இயேசுவும் நமக்காகச் செய்த விஷயங்களிலிருந்து நாம் எப்படி நன்மை அடையலாம்... என்பதைப் பற்றி அந்தப் பேச்சில் சொல்வார்கள்.

அடுத்து வரும் வருஷங்களில் நினைவுநாள் நிகழ்ச்சி எப்போது நடக்கும்?

2025: சனி, ஏப்ரல் 12

2026: வியாழன், ஏப்ரல் 2