Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு ப்ராஜெக்ட்

விழிப்புடன் இருக்க ஆழமாகப் படியுங்கள்

விழிப்புடன் இருக்க ஆழமாகப் படியுங்கள்

தானியேல் 9:1-19-ஐ வாசித்து, ஆழமாகப் படிப்பது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பின்னணியை ஆராய்ச்சி செய்யுங்கள். அதற்கு முன்பு என்ன நடந்தது? அதனால் தானியேலுக்கு என்ன நடந்தது? (தானி. 5:29–6:5) அவருடைய இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

ஆழமாகத் தோண்டிப் பாருங்கள். தானியேல் படித்த ‘பரிசுத்த புத்தகங்கள்’ எதுவாக இருந்திருக்கலாம்? (தானி. 9:2, அடிக்குறிப்பு; w11-E 1/1 22 ¶2) தானியேல் ஏன் தன்னுடைய பாவங்களை மட்டுமல்ல, இஸ்ரவேல் தேசத்தார் செய்த பாவங்களையும் ஒத்துக்கொண்டார்? (லேவி. 26:39-42; 1 ரா. 8:46-50; dp 182-184) கடவுளுடைய வார்த்தையை அவர் ஆழமாகப் படித்தார் என்பதை அவருடைய ஜெபம் எப்படிக் காட்டுகிறது?—தானி. 9:11-13.

பாடங்களைக் கண்டுபிடியுங்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • ‘உலக சம்பவங்கள் என்னுடைய கவனத்தைச் சிதறடிக்காமல் இருக்க நான் என்ன செய்யலாம்?’ (மீ. 7:7)

  • ‘தானியேலை மாதிரியே கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் படிப்பது எனக்கு எப்படி உதவும்?’ (w04 8/1 12 ¶17)

  • ‘எந்த விஷயங்களைப் பற்றி தனிப்பட்ட படிப்பில் ஆழமாகப் படிப்பது “விழிப்புடன்” இருக்க உதவும்?’ (மத். 24:42, 44; w12 8/15 5 ¶7-8)