யோபு 38:1-41

38  அப்போது, புயல்காற்றிலிருந்து யெகோவா யோபுவிடம்,+   “நான் சொல்வதை மாற்றிப் பேசுவது யார்?அறிவு இல்லாமல் பேசுவது யார்?+   மனுஷனே, தயவுசெய்து தயாராகு.நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்.   நான் பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோது+ நீ எங்கே இருந்தாய்? உனக்குத் தெரியும் என்றால் சொல்.   அதற்கு அளவுகள் குறித்தது யார் என்று சொல்ல முடியுமா?நூல் பிடித்து அதை அளந்தது யார் என்று தெரியுமா?   அதன் அஸ்திவாரம் எதன்மேல் போடப்பட்டது?அதற்கு மூலைக்கல் வைத்தது யார்?+   விடியற்கால நட்சத்திரங்கள்+ ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகப் பாடியபோது,கடவுளுடைய தூதர்கள்*+ சந்தோஷ ஆரவாரம் செய்தபோது, நீ எங்கே இருந்தாய்?   கருப்பையிலிருந்து வருவதுபோல் கடல் புரண்டு வந்தபோது,அதற்கு அணை போட்டது யார்?+   நான் மேகங்களால் அதைப் போர்த்தினேன்.கருமேகங்களால் அதை மூடினேன். 10  அதற்கு ஒரு எல்லைக்கோடு கிழித்தேன்.கதவுகளும் தாழ்ப்பாள்களும் வைத்தேன்.+ 11  ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது.இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்;+ அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்? 12  பொழுது விடிய வேண்டும் என்று நீ கட்டளை கொடுத்தது உண்டா?அது எங்கே விடிய வேண்டும்+ என்று நீ சொன்னது உண்டா? 13  அது பூமி முழுவதையும் வெளிச்சமாக்குகிறது.கெட்டவர்களை ஓடி ஒளிய வைக்கிறது.+ 14  களிமண்ணில் பதியும் முத்திரைபோல் பூமியின் தோற்றம் தெளிவாகத் தெரிகிறது.அதன் இயற்கை அமைப்புகள் ஒரு உடையிலுள்ள வடிவங்கள்போல் பளிச்சென்று தெரிகின்றன. 15  கெட்டவர்கள் சுறுசுறுப்பாக இருக்கும் நேரம்* முடிவுக்கு வருகிறது.அவர்களுடைய அட்டகாசம் அடங்குகிறது. 16  கடலுக்கு அடியிலுள்ள ஊற்றுகளை நீ பார்த்திருக்கிறாயா?கடலின் ஆழங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறாயா?+ 17  மரணத்தின் வாசலை+ யாராவது உனக்குக் காட்டியிருக்கிறார்களா?மரண இருளின் வாசலை+ நீ பார்த்திருக்கிறாயா? 18  பூமி எவ்வளவு பெரியது என்று உனக்குத் தெரியுமா?+ இதற்கெல்லாம் உன்னிடம் பதில் இருந்தால் சொல். 19  ஒளி எங்கிருந்து வருகிறது?+ இருள் எங்கிருந்து வருகிறது? 20  அங்கே போகும் வழி உனக்குத் தெரியுமா?அங்கேயே அவற்றைத் திருப்பி அனுப்ப உன்னால் முடியுமா? 21  இதெல்லாம் படைக்கப்பட்ட சமயத்திலேயே நீ பிறந்துவிட்டாயோ?காலம்காலமாக வாழ்ந்து, எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறாயோ? 22  நீ பனியின் கிடங்குக்குப் போயிருக்கிறாயா?+ஆலங்கட்டியின்* கிடங்கைப் பார்த்திருக்கிறாயா?+ 23  அவற்றை அழிவு நாளுக்காக நான் சேமித்து வைத்திருக்கிறேன்.போர் நாளுக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்.+ 24  ஒளி* எந்தத் திசையிலிருந்து சிதறுகிறது?கிழக்குக் காற்று எங்கிருந்து புறப்பட்டு வருகிறது?+ 25  மேலே உள்ள தண்ணீர் கீழே இறங்குவதற்குக் கால்வாய் வெட்டியது யார்?மழைமேகத்துக்கும் இடிமுழக்கத்துக்கும் வழியை உண்டாக்கியது யார்?+ 26  மனுஷ நடமாட்டமே இல்லாத இடத்தில் மழையைக் கொட்டுவது யார்?ஜனங்கள் வாழாத வனாந்தரத்தில் அதைப் பெய்ய வைப்பது யார்?+ 27  மழைநீரால் பொட்டல் காடுகளைப் பசுமையாக்குவது யார்?புல்பூண்டுகளை முளைக்கச் செய்வது யார்?+ 28  மழையைப் பெற்றெடுத்தது யார்?+பனித்துளியை உருவாக்கியது யார்?+ 29  பனிக்கட்டியைப் பிறப்பித்தது யார்?உறைபனியை உண்டாக்கியது யார்?+ 30  தண்ணீரைக் கல் போல மாற்றுகிறவர் யார்?கடலின் மேற்பரப்பை உறைய வைக்கிறவர் யார்?+ 31  கிமா* நட்சத்திரக் கூட்டத்தை உன்னால் ஒன்றுசேர்த்துக் கட்ட முடியுமா?கீஸில்* நட்சத்திரக் கூட்டத்தின் கட்டை அவிழ்க்க முடியுமா?+ 32  ஒரு நட்சத்திரக் கூட்டத்தை அதன் காலத்தில் வரப்பண்ண முடியுமா?ஆஷ்* நட்சத்திரக் கூட்டத்துக்கு* வழி காட்ட முடியுமா? 33  வானத்தை இயக்கும் சட்டங்கள்+ உனக்குத் தெரியுமா?பூமியை அவை* இயக்கும்படி செய்ய உன்னால் முடியுமா? 34  மேகத்தை நீ சத்தம்போட்டு கூப்பிட முடியுமா?உன்மேல் மழையைக் கொட்டும்படி சொல்ல முடியுமா?+ 35  மின்னலைப் பார்த்து, ‘புறப்பட்டுப் போ!’ என்று கட்டளை கொடுக்க முடியுமா? அது திரும்பி வந்து, ‘இதோ, வந்துவிட்டேன்!’ என்று உன்னிடம் சொல்லுமா? 36  மேகங்களுக்கு* ஞானத்தைக் கொடுத்தது யார்?+வானத்துக்கு* புரிந்துகொள்ளும் திறனைத் தந்தது யார்?+ 37  மேகங்களைக் கணக்கிடும் அளவுக்குப் புத்திசாலி யாராவது உண்டா?வானத்தின் தண்ணீர் ஜாடிகளைச் சாய்க்கும் அளவுக்குத் திறமைசாலி யாராவது உண்டா?+ 38  மழைநீரை மண்ணோடு கலந்து சேறாக ஓட வைக்கிறவர் யார்?மண்கட்டிகளை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள வைக்கிறவர் யார்? 39  சிங்கம் குகையில் பதுங்கியிருக்கும்போது,சீறிப் பாயக் காத்திருக்கும்போது, 40  அதற்காக நீ இரையை வேட்டையாடித் தர முடியுமா?சிங்கக் குட்டிகளின் பசியைத் தீர்க்க முடியுமா?+ 41  அண்டங்காக்கைக் குஞ்சுகள் பசியில் தள்ளாடும்போது,கடவுளிடம் உதவி கேட்டுக் கெஞ்சும்போது,அவற்றுக்கு உணவு தருவது யார்?”+ என்று கேட்டார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மகன்கள் எல்லாரும்.”
வே.வா., “கெட்டவர்களின் பகல் வெளிச்சம்.”
அதாவது, “பனிக்கட்டியின்.”
அல்லது, “மின்னல்.”
இது ரிஷப நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரங்களைக் குறிக்கலாம்.
இது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
இது அர்சா மேஜர் என்ற பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
நே.மொ., “கூட்டத்துக்கும் அதன் மகன்களுக்கும்.”
அல்லது, “அவர்.”
அல்லது, “மனுஷர்களுக்கு.”
அல்லது, “மனதுக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா