பிரசங்கி 9:1-18

9  அதனால், இதையெல்லாம் ஆழமாக யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தேன்: நீதிமான்களும் ஞானமுள்ளவர்களும் உண்மைக் கடவுளுடைய கையில் இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்களும் அவருடைய கையில்தான் இருக்கின்றன.+ தங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் காட்டிய அன்பையும் வெறுப்பையும் பற்றி மனுஷர்களுக்குத் தெரியாது.  நீதிமான்களோ பொல்லாதவர்களோ,+ நல்ல குணமும் பரிசுத்தமும் உள்ளவர்களோ பரிசுத்தம் இல்லாதவர்களோ, பலி செலுத்துகிறவர்களோ பலி செலுத்தாதவர்களோ, எல்லாருக்கும் ஒரே கதிதான்.+ நல்லவனுக்கும் சரி, பாவிக்கும் சரி, உறுதிமொழி கொடுக்கிறவனுக்கும் சரி, உறுதிமொழி கொடுக்க யோசிக்கிறவனுக்கும் சரி, ஒரே முடிவுதான்.  சூரியனுக்குக் கீழே நடக்கிற இன்னொரு கொடுமை இதுதான்: எல்லாருக்கும் ஒரே கதி+ ஏற்படுவதால் மனுஷர்களுடைய இதயம் தீமையால் நிறைந்திருக்கிறது. உயிரோடிருக்கிற காலத்தில் அவர்களுடைய இதயத்தில் பைத்தியக்காரத்தனம் குடியிருக்கிறது. கடைசியில், அவர்கள் செத்துப்போகிறார்கள்.  உயிரோடு இருக்கிற எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.+  உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும்.+ ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது,+ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை.+  அவர்கள் காட்டிய அன்பும், வெறுப்பும், பொறாமையும் ஏற்கெனவே அழிந்துவிட்டன. சூரியனுக்குக் கீழே நடக்கிற காரியங்களில் இனி அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.+  நீ போய் சந்தோஷமாகச் சாப்பிட்டு, ஆனந்தமாகத் திராட்சமது குடி.+ ஏனென்றால், உன் செயல்கள் உண்மைக் கடவுளுக்குப் பிரியமானவையாக இருக்கின்றன.+  எப்போதும் வெள்ளை உடையை* உடுத்திக்கொள், உன் தலைக்குத் தவறாமல் எண்ணெய் வைத்துக்கொள்.+  சூரியனுக்குக் கீழே கடவுள் உனக்குக் கொடுத்திருக்கிற நிலையில்லாத* வாழ்நாளெல்லாம், உன் அருமை மனைவியோடு சேர்ந்து வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவி.+ உன்னுடைய நிலையில்லாத* வாழ்நாளெல்லாம் அவளோடு சந்தோஷமாக இரு. ஏனென்றால், உன் வாழ்க்கைக்கும் சூரியனுக்குக் கீழே நீ உழைக்கிற உழைப்புக்கும் கிடைக்கிற பலன் இதுதான்.+ 10  உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில்* வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.+ 11  சூரியனுக்குக் கீழே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை,+ ஞானமுள்ளவர்களிடம் எல்லா சமயத்திலும் உணவு இருப்பதில்லை, புத்திசாலிகளிடம் எல்லா சமயத்திலும் சொத்து குவிந்திருப்பதில்லை,+ அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை.+ ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன. 12  எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று மனுஷர்களுக்குத் தெரியாது.+ மீன்கள் கொடிய வலையில் மாட்டிக்கொள்வது போலவும், பறவைகள் கண்ணியில் சிக்கிக்கொள்வது போலவும், மனுஷர்கள் திடீரென்று அழிவில் சிக்கிக்கொள்கிறார்கள். 13  சூரியனுக்குக் கீழே நான் ஞானத்தைப் பற்றி ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன், அது என் மனதில் ஆழமாகப் பதிந்தது: 14  ஒரு சின்ன ஊரில் சில ஆட்கள் இருந்தார்கள். பலமுள்ள ஒரு ராஜா படையெடுத்து வந்து அதைச் சுற்றிவளைத்தான். அதைப் பிடிப்பதற்காகப் பெரிய மண்மேடுகளை அமைத்தான். 15  அந்த ஊரில் ஒரு ஏழை இருந்தான். அவன் ஞானமுள்ளவன். தன்னுடைய ஞானத்தால் அந்த ஊரைக் காப்பாற்றினான். ஆனால், அந்த ஏழையை எல்லாரும் மறந்துவிட்டார்கள்.+ 16  அதனால், நான் இப்படி நினைத்துக்கொண்டேன்: ‘பலத்தைவிட ஞானம் சிறந்தது.+ ஆனாலும், ஏழையின் ஞானத்தை யாரும் மதிப்பதில்லை. அவனுடைய வார்த்தைகளை யாரும் காதில் வாங்குவதில்லை.’+ 17  முட்டாள்களை ஆளுகிறவன் போடுகிற கூச்சலைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவன் அமைதியாகச் சொல்கிற வார்த்தைகளைக் கேட்பது நல்லது. 18  போர் ஆயுதங்களைவிட ஞானம் சிறந்தது. ஆனால், ஒரேவொரு பாவியால் எத்தனையோ நல்ல காரியங்களைக் கெடுத்துப்போட முடியும்.+

அடிக்குறிப்புகள்

இது சந்தோஷத்தை வெளிக்காட்டும் பளிச்சென்ற உடையைக் குறிக்கிறது.
வே.வா., “வீணான.”
வே.வா., “வீணான.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா