Skip to content

கடவுள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே குடியிருக்கிறாரா?

கடவுள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே குடியிருக்கிறாரா?

பைபிள் தரும் பதில்

 ஆமாம். கடவுள் குறிப்பிட்ட ஒரு இடத்தில், அதாவது பரலோகத்தில், மட்டுமே குடியிருக்கிறார். இந்த பைபிள் வசனங்களைக் கவனியுங்கள்:

 ஒருசமயம், சாலொமோன் ராஜா ஜெபம் செய்யும்போது, “நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து கேளுங்கள்” என்று சொன்னார்.—1 ராஜாக்கள் 8:43.

 “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே” என்று ஜெபம் செய்யும்படி இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 6:9.

 இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, ‘கடவுளுக்கு முன்னால் நமக்காகத் தோன்றும்படி பரலோகத்துக்குள்’ போனார்.—எபிரெயர் 9:24.

 யெகோவா தேவன் நிஜமான ஒரு நபர் என்பதையும், அவர் எல்லா இடங்களிலும் அல்ல, ஆனால் பரலோகத்தில் மட்டுமே குடியிருக்கிறவர் என்பதையும் இந்த வசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.